வலி
வலி
நிலவை தொலைத்த இரவை போல,
உன்னை தொலைத்துவிட்டேனடி
என் வாழ்க்கையில் இருந்து,
நீ இல்லா ஒவ்வொரு நொடியும்
நரகத்தின் கொடுமை என்பது எவ்வாறு இருக்கும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது,
எந்தன் மனதினில் தாறுமாறாக ஓடும் எண்ணங்களை அறிய முயல்வாயா,
என்னை ஏற்பாயா?
உன் வாழ்க்கை என்பது மாறி
நம் வாழ்க்கை என்றாகுமா?
பௌணர்மியாகி இரவினை ஏற்கும் நிலவை போல,
என்னை ஏற்றுக் கொள்வாயா?
என் வாழ்க்கையில் தொலைந்த
அன்பை,
காதலை,
மகிழ்ச்சியை,
அரவணைப்பை,
மீண்டும் தருவாயா?