காதல்
காதல்
யாரென தெரியாமல் தொடங்கிய உறவு,
பார்த்துக் கொள்ள வாய்பிருந்தும்,
பார்க்காமல் தொடரும் உறவு,
உனது குரலிலேயே உன்னை அறிந்துக் கொள்ள செய்யும் உறவு,
உனது சிறு குறுஞ்செய்தியும் உன்னை எனக்கு காட்டிவிடும்,
நான் நினைக்கும் போதெல்லாம்,
என்னிடம் பேசும் உறவு,
அதும் நான் கேட்காமலே.....
காதலும் திருட்டுதனங்களை கொண்டது தான்.....
அது தான் காதல் கொண்டவர்களிடம் மட்டுமே வெளிப்படும்....
அதிலும் குழந்தைதனமும் இருக்கதான் செய்யும்....
காதலில் விட்டு கொடுத்தல் மட்டுமே,
காதலை நிலைக்க செய்கிறது....
என்னை சேர்ந்த எந்தன் காதல்,
என்றுமே எனக்கு அற்புதம் தான்.....