உன்னுடன்
உன்னுடன்
அன்பான உந்தன் கரங்களில்,
எனை ஏந்திக் கொள்ள,
என் மனம் எப்பொழுதும் நினைத்திருக்கும்,
ஒரு குழந்தை தன் தாயின்
அரவணைப்பை தேடுவது போல...
நான் உன் இதயத்தில் தஞ்சம் அடைந்து விடவே நினைக்கிறேன்,
ஒரு பறவையை போல,
உன்னிடத்தில் மட்டுமே நான் சுதந்திரமாக உணர்கிறேன்,
காற்றை போல,
உன்னுடன் மட்டுமே நான் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்,
பூக்களை போல...
உன்னிடம் இருந்தே எனக்கான நம்பிக்கையை பெறுகிறேன்,
நிலவை போல.....