மழை
மழை
மழையே.....
சின்ன சின்ன தூரலாய்,
நீ விழுவதை காணும் போதெல்லாம்,
மனமானது குழந்தையாகி தான் போகின்றது,
உன்னை தொட்டு ரசிப்பதில்,
உந்தன் தீண்டலும்,
மெய் சிலிர்க்க வைத்துவிடுகிறது,
காதலின் தீண்டலை போல.....
நீ
எப்போது வந்தாலும்,
புது உணர்வாக தான் இருக்கிறது.....
