STORYMIRROR

Ganesan N

Drama Horror Tragedy

3  

Ganesan N

Drama Horror Tragedy

சோகம்

சோகம்

1 min
206


எந்த பறவையும்

அந்த திசையில் பறப்பதில்லை

பிராணிகள் நடமாட்டம் இல்லை

மனிதர்கள் கொரோனா கட்டுப்பாட்டு

ஊரடங்கு உத்தரவால் முடங்கி

வீடடங்கி தனிமையில்

கொரோனா நோயாளிகள்

சிகிச்சை பலனின்றி மரணம் 

சடலம் சுமந்து செல்ல ஆட்களிகளில்லை

உடலை எரிக்க தனி இடமில்லை

குவியல் குவியலாய்

நதிக்கரையில்

எரிகின்றன பிணங்கள்

செந்தணல் புகைநாற்றம்

வான்வெளியில் சூழ்ந்து

எங்கும் பரவி

ஊடகங்கள் மறைக்கும் செய்திகள்

உறைந்து போய் தவிக்கும்

ஆறுதல் அற்ற 

மனிதர்கள் முகங்களில் சோகம்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama