சோகம்
சோகம்
எந்த பறவையும்
அந்த திசையில் பறப்பதில்லை
பிராணிகள் நடமாட்டம் இல்லை
மனிதர்கள் கொரோனா கட்டுப்பாட்டு
ஊரடங்கு உத்தரவால் முடங்கி
வீடடங்கி தனிமையில்
கொரோனா நோயாளிகள்
சிகிச்சை பலனின்றி மரணம்
சடலம் சுமந்து செல்ல ஆட்களிகளில்லை
உடலை எரிக்க தனி இடமில்லை
குவியல் குவியலாய்
நதிக்கரையில்
எரிகின்றன பிணங்கள்
செந்தணல் புகைநாற்றம்
வான்வெளியில் சூழ்ந்து
எங்கும் பரவி
ஊடகங்கள் மறைக்கும் செய்திகள்
உறைந்து போய் தவிக்கும்
ஆறுதல் அற்ற
மனிதர்கள் முகங்களில் சோகம்.