அன்பெனும் காதல்
அன்பெனும் காதல்
மனமெங்கும் காதலால் நிறைத்து,
அன்பெனும் கயிறால்,
கனவுகளை அணைத்து,
மகிழ்ச்சி என்னும் கதவினை,
கற்பனையெனும் பூட்டு போட்டு,
எனக்கான வரையறை என்னும்
வட்டத்தினை வரைந்து வைத்திருந்தேன்,
அதனை உடைத்தெறிவதற்காகவே
வந்தாய் எந்தன் வாழ்வில்,
என் மீது அன்பான காதலை கொண்டு....