மழைக்காபி
மழைக்காபி
இருளாத ஒளியும்
ஒளிராத இருளும்
கூடிய இக்காலை
ஒரு கதாநாயகி போல
மழையில் குளித்துக்
குதூகலிக்கிறது…
அந்த மழை என் மனதையும்
நனைக்கிறது, என் மகிழுந்துடன் சேர்த்து.
இதே போன்றதொரு பொழுதில்
உன்னுடன் பகிர்ந்து கொண்ட அந்த
அரைக் காபி, இப்போது
கார் கண்ணாடிகளில்
மழைக்கு பதிலாய் வழிந்து
என் நினைவுகளைப் பிழிகிறது.
உண்மைதான்.
காபியில் என்ன இருக்கிறது?!
