STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

சிந்தனை

சிந்தனை

1 min
199

மூளையில்

எண்ணத் தொகுப்பு!


நியூரான்களின்

வேக ஓட்டத்தில்

விளையும் விந்தை!


அன்றாடச் செயல்களைத்

தானியங்கியில் விட்டுவிட்டு

எதிர்மறைக்குத் 

துதிபாடும் அதிசயம்!


ஏன் என்று கேட்காமல்

ஏனோ என்றோடும் மனம்!


எண்ணங்களை

எண்ணினால் 

விடுபடும் வியப்பு!


உலகம் உயரத்

தெளித்த விதை!


ஆன்மாவின்

அருகில் இருக்கும்

அற்புத உலகம்!


நல்வழிப் படுத்தினால்

நமக்கு அடிமையாகும்!


தன்வழி விட்டால்

நாம் அடிமையாவோம்!


உண்மையின் ஔியில்

ஔிரும் வைரம்!


பொய்மையின் 

அழுக்கில்

வாடும் மலர்!


களையெடுத்து

நீர் பாய்ச்சினால்

கடவுளைக் காட்டும்!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract