STORYMIRROR

Nithyasree Saravanan

Others

4  

Nithyasree Saravanan

Others

ரசிக்க மறந்து...!!!

ரசிக்க மறந்து...!!!

1 min
267

இருள் மெல்ல விலகத் தொடங்க 


காற்றும் சற்று குளிராகவே இருக்க 


பறவைகளின் கானம் இதமாய் கேட்க 


கதிரவன் தன் கதிர்களை மெல்ல நீட்டி 


சோம்பல் முறித்து எட்டிப் பார்க்க 


வெட்கம் சிந்திய மேகமோ 


செவ்வானத்தை எடுத்துப் போர்த்த 


இரவின் பனியில் நனைந்த நெற்கதிரோ 


காற்றின் இசைக்கு தலையசைத்து 


கதிக்கரம் வீசும் திசை நோக்கி சாய்ந்து குளிர் காய 


நனைந்திருந்த தரையும் மண் வாசம் வீச 


மரத்தில் அணில்களும் துள்ளிக் குதித்து விளையாட 


அழகாய் புலரும் காலை பொழுதை காணாது 


பலர் ஏழு மணிக்கு அலாரம் அடிக்கும் வரை தூங்குகின்றனர் 


கற்பனை கனவில் எட்டாத இயற்கை காட்சியின் 


அழகை ரசிக்க மறந்து....!!!



Rate this content
Log in