STORYMIRROR

Chidambranathan N

Children Stories Inspirational Children

3  

Chidambranathan N

Children Stories Inspirational Children

குழந்தையின் பாசமிகுந்த அம்மா

குழந்தையின் பாசமிகுந்த அம்மா

1 min
180

தன் வயிற்றில் சுமக்கும் குழந்தையின் எதிர்காலத்தினைப் பற்றிக் கனவுக் காண்பவள் அம்மா!

தன் வயிற்றில் சுமக்கும் குழந்தையுடன் கற்பனையில் உரையாடுபவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தையையும் பத்துமாதம் சுமந்து பெற்றெடுப்பவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் தனது மழலைப் பேச்சுடன் உச்சரிக்கும் முதல் வார்த்தை அம்மா!

சிப்பிக்குள் இருக்கும் முத்தினைப் போலத் தன் குழந்தையினைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்ப்பவள் அம்மா!

தன் குழந்தைக்கு மட்டுமே தெரியும் மொழியில் தன் குழந்தையுடன் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பவள் அம்மா!

இரவின் உறக்கத்தினைத் துறந்துவிட்டுக் குழந்தையினை ரசித்துக் கொண்டிருப்பவள் அம்மா!

குழந்தைக்கு வியர்க்கக் கூடாது என்றும் சிறு பூச்சிகள் அண்டக் கூடாது என்றும் தொடர்ந்து பாதுகாப்பவள் அம்மா!

வானத்திலும் பூமியிலும் தேடினாலும் நமக்குக் கிடைக்காத மற்றொரு உறவு அம்மா!

அனைத்துவிதமான அகராதியில் தேடினாலும் நமக்கு முழுமையாக விளக்கம் கிடைக்காத ஒரு வார்த்தை அம்மா!

ஒவ்வொரு குழந்தையின் இதயத்திற்குள்ளும் உயிர் ஓவியமாகத் திகழ்பவள் அம்மா!

குழந்தையின் மீது எண்ணிலடங்காத அளவுப் பாசமும் வைத்திருப்பவள் அம்மா!

இந்த உலகில் உள்ள அனைத்து உறவுகளிலும் தலை சிறந்த உறவு அம்மா!

அலுவலகம் சென்று காலதாமதமாக வரும் தன் குழந்தைக்காக உணவு உண்ணாமல் கண் விழித்துக் காத்துக் கொண்டிருப்பவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினையே அர்ப்பணிப்பவள் அம்மா!

ஒவ்வொரு மனிதனும் அன்புடனும் பாசத்துடனும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய உறவு அம்மா!


Rate this content
Log in