பாட்டி பாடி ஆன கதை..
பாட்டி பாடி ஆன கதை..
ஒரு பாட்டி பிறக்கும்போதே பாட்டியாக பிறந்து பிறந்த அன்றே பாதியாக ஆன கதை தான் இது...
ஒண்ணாங்கிளாஸ் பையன் ஒருத்தன்... அவன் தான் இந்த கதையோட வில்லன்... இரண்டாவது படிக்கும் பையன் ஒருத்தன் அவன் தான் இந்த கதையோட ஹீரோ... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்கிற சஸ்பென்ஸ் திரில்லர் ஸ்டோரி தான் இந்த கதை...
உங்க சந்தேகம் எனக்கு புரியுது... எல்லாரும் குழந்தையா தானே பிறப்பாங்க... பாட்டி மட்டும் எப்படி பிறக்கும்போதே பாட்டியாக பிறந்தார் என்று கேட்கிறீர்களா???
சந்தேகம் தீரனும்னா இந்த கதையை கடைசிவரை முழுசா கவனமா படிக்கணும்...
வாங்க கதைக்குள்ள போகலாம்...
நம்ம ஹீரோ.... அதாவது இரண்டாம் கிளாஸ் பையன்.... ஒரு சிலேட்டில் "பாட்டி" அப்படின்னு எழுதி வச்சுட்டு விளையாடப் போய்ட்டான்.... நம்ம வில்லன் அதாவது ஒன்னாங்கிளாஸ் பையன்... யாருக்கும் தெரியாம வந்து அந்த சிலேட்ல எழுதி இருந்ததுல நடு எழுத்த அழிச்சுட்டான்.... அவ்ளோ தா... கத முடிஞ்சுது...