ஏலியன் அட்டாக் - 6
ஏலியன் அட்டாக் - 6
தன் தம்பி அணிந்திருந்த ஆடையில் வெரு ஒருவரை பார்த்து உள்ளோம் என்பதை அனு தாமதமாகவே புரிந்துகொன்டாள். அவள் விழிகளில் ஆறென கண்ணீர் ஓடியது....
"அணு, முகிலனுக்கு எதுவும் ஆயிருக்காது.... அவன் இங்க பக்கத்துல எங்கயாவது தான் இருப்பான்.... வா போய் தேடி பாக்கலாம் ", மாயா அவளை சமாதானம் செய்து அங்கிருந்து கூட்டிச்சென்றாள்; உடன் வில்சனும் சென்றார். அணு தம்பியை தொலைத்த வேதனையில் வில்சனின் வருகையை மறந்தாள்.
கடற்கரையை விட்டு கடைகள் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். "முகீகீகீல்..........முகீகீகீகிகில்" அணுவும் மாயாவும் மாற்றி மாற்றி கூச்சலிட்டனர்.
டாக்டர். வில்சனுக்கு முகிலனின் முகம் உயரம் நிறம் போன்ற எதுவும் தெரியாது, ஆனாலும் மயக்கத்தில் இருந்த சிறுவனின் அந்த நீல நிற ஆடையை வைத்து தன்னால் இயன்ற அளவிற்கு தேடினார்.
(கொடும என்னனா.... அவர் கண்ணுல ஒரு ப்ளூ ட்ரெஸ் கூட படல.....😂
ஏன் அப்டின்னு கேட்டிங்கனா..? அந்த ரோட் ல யாருமே இல்லியே..😁😁😁)
அந்த கடற்கரை சாலையை விட்டு சற்று தொலைவில் இருந்தது.... அது மட்டும் இல்லாமல் அந்த சாலையில் அதிக மக்கள் நடமாட்டமும் இருக்காது, இதற்காகவே மக்கள் அந்த கடற்கரையை தேடி வருவார்கள்.
ஆனால் இன்று இப்படி நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. வந்திருந்த மக்களில் பாதிபேர் அந்த விசித்திர உயிரினதால் மயக்கத்தில் உள்ளனர்; மீதி பேர் அந்த உயிரினதிற்கு பயந்து மறைவாக உள்ளனர்.
இவர்கள் மூவரும் சாலையில் நடமாடுவதை பார்த்த இரண்டு சிறுவர் தான் முதலில் தாங்கள் மறைவாக இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்கள் .
அவர்கள் நேராக அனுவிடம் வந்தார்கள். "அக்கா..... " அதில் ஒருவன் அவளை அழைத்தான். அனுவிர்க்கு தன் தம்பி அழைப்பது போலவே இருந்தது. சட்டென திரும்பியவள் ஒரே நொடியில் ஏமாற்றத்தை சந்தித்தாள்.
"அக்கா... அந்த மிருகம் போயிருச்சா....? எங்க அப்பாவா காணோம்.... நாங்க தேடி கண்டுபிடிக்கனும்.....", 12 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள்..... அவர்களின் ஒன்றுபட்ட தோற்றமே அவர்கள் இரட்டையர்கள் என்பதை கூறியது. முகத்தில் பயம் கலந்த சோகம் தெரிந்தது. "இங்க பாருங்க பா..... அந்த மிருகம் போயிருச்சு.... நீங்க போய் உங்க அப்பாவ தேடலாம்...... ", என்று சொன்னவள் தன் மொபைல் போனை எடுத்து அதில் தன் தம்பியின் படத்தை அவர்களுக்கு காட்டினாள். வில்சணும் தேடுவதற்கு உதவியாக இருக்கும் என அந்த படத்தை பார்த்தார்.
"இது என் தம்பி...... இவன எங்கயாவது பாத்திங்களா?" ஆர்வமாக அனு கேட்டாள்,...
"இல்ல அக்கா.... நாங்க பாக்கல", அவர்களின் பதில் அணுவின் ஆர்வத்திற்கு மூடி போட்டது.
"சரி நீங்க போங்க ... உங்க அப்பா அந்த கரையில தான் இருப்பாங்க" அனுவிர்க்கு அந்த பெரிய இராட்சத கடல் மிருகம் தான் கண்முன்னே வந்தது.
அப்போதுதான் அவளின் நினைவிற்கு வந்தது. சட்டென திரும்பியவள் "ஐ அம் சாரி சார்.... தம்பி காணாம போன நெனப்புல உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே சார்".
"இட்ஸ் ஓகே மா.... ஒரு நன்றிகாகவா நான் இவளோ தூரம் வந்து இருக்கேன்..? மொதல்ல தம்பி கண்டுபிடிக்கலாம்.... மத்ததெல்லாம் அப்ரம்மா பாத்துக்கலாம்", வில்சன் பெருந்தன்மையுடன் கூறினர்.
" தங்க் யூ சார் ...., பட் அவன் எங்க இருக்கான்னு தெரியலையே.... ஸ்நாக்ஸ் வாங்க போறேன்னு சொல்லிட்டு தான் போனான்....... இங்கதான் வந்து இருக்கணும்..... அணுவின் பார்வை சாலையின் எல்லா மூளையிலும் பாய்ந்தது...
" சார் இதெல்லாம் அந்த வானத்துல இருந்து வந்த பொருளாளா தான் நடக்குதா...?" , மாயாவின் கேள்வி இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வில்சன் ஏதோ கூற தயங்கினார். சொல்லுங்க சார் அதுதான் காரணமா?, அணு கேட்டாள்.
நீண்ட பெருமூச்சு விட்ட வில்சன் "ஆமாம்மா.... அது ஏலியன் டெக்னாலஜி.... நம்ம உலகத்துல இருக்கற மாதிரியே அங்கேயும் நல்லவங்களும் கேட்டவங்களும் இருக்காங்க..... இப்போ அவங்க பார்வா பூமி மேல பட்டு இருக்கு அவங்க இத ஆழ நினைக்கிராங்க", அவர் கூறிக்கொண்டு இருக்கும்போதே முகிலனின் கூக்குரல் கேட்டது. அவர்கள் மூவரும் குரல் வந்த திசை நோக்கி விரைந்தனர்.
_ தொடரும்......