STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Children Stories Children

3  

Amirthavarshini Ravikumar

Children Stories Children

அன்பினால் உணவு

அன்பினால் உணவு

1 min
177

கவி ஒரு சுட்டி குழந்தை. காலையில் எழுந்த உடன் தன் வீட்டின் அருகே மரத்தில் உள்ள பறவைகள், அணில்களுடன் விளையாடுவாள். ஒரு நாள் அந்த அணிலை காணவில்லை. அவள் தன் அம்மாவிடம் சென்று கேட்டபொழுது அது வந்துவிடும் என கூறிவிட்டார். கவியும் இரண்டு மூன்று நாட்களாக காத்திருந்து பார்த்தாள். ஆனால் அது வரவில்லை. உடனே அழத் தொடங்கி விட்டாள். அவளது தாயார் என்னாயிற்று கவி என்று கேட்க, அம்மா அது இன்னும் வரவில்லை எனக் கூறினாள். அப்பொழுது கவியின் அம்மா, "கவி நீ அதை தினமும் பார்த்து விளையாட தான் செய்ற ஆனா அதுக்கு என்னை கேட்டு சாப்பாடு குடுத்தியா? "

 "இல்லை அம்மா"

 "அதனால தான் அது வந்து வேற இடத்துக்கு சாப்பாடு தேடி போயிருச்சு".

 "அம்மா அத வார சொல்லுங்கம்மா நான் இனி தினமும் சாப்பாடு கொடுக்கிறேன்". 

கவியின் அம்மா சிரித்துக்கொண்டே நாளை வந்துவிடும் கவி என்றாள். 

 கவி அன்று மாலை தன் வீட்டின் மாடியில் பறவைகள் விலங்குகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு சிறிய சிறிய கிண்ணங்களை தயார் செய்து வைத்தாள். காலை எழுந்தவுடன் அந்த கிண்ணங்களில் சாப்பாடு வைத்தாள். சிறிது நேரத்திற்குள் அங்கு நிறைய பறவைகள் வந்தது. அணிலும் வந்தது கவி மகிழ்ச்சி அடைந்தாள். தினமும் சாப்பாடு வைத்து, அதனுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.


Rate this content
Log in