வறுமையின் நாள்
வறுமையின் நாள்
துள்ளி திரிந்த காலம் அது;என் மனதில் நீங்கா இடம் பிடித்து,
தெரு முழுவதும் வீடுகள்; என் விட்டில் மட்டும் நாங்கள் எட்டு பேர்,
வீடு மட்டும் தான் சிறியது; ஆனால் எங்கள் அனைவரின் மனம் பெரியது.
சாலையில் செல்லும் போது ஏன் நாம் நடந்து செல்கிரேம்; மற்றவர் வாகனங்களில் செல்கிறார்,
என்ற கேள்விக்கு பதில் கூட தெரியாமல் வாழ்ந்தேன்,
வறுமையில் பிறந்திருந்தால் இந்த நிலை வந்தது என்று கூட தெரியாமல் வாழ்ந்த காலம்.
பசியுடன் பல நாள் விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள் எண்ணி எண்ணி கடந்தேன்,
கிழிந்த சட்டையை அணிந்தேன் வெகு காலம்,
வாழ்க்கை என்பது என்னை எந்த திசையில் கொண்டு செல்லுமோ; அவ்வாறே பயணித்தேன்.
வருடங்கள் பல ஓடின; ஆனால் இன்றும் கூட என்னால் வாகனத்தில் பயணிக்க முடியவில்லை,
வறுமை என்னை இவ்வளவு படுத்தும் என எண்ணவில்லை,
முன்று வேளை உண்ண உணவு கிடைத்தால் போதும் என்னக்கு,
ஆனால் ஒரு வேளை உணவுக்கே திண்டாட்டம்.
வறுமையால் வருத்தம் கொண்ட காலம் இப்பொழுது; ஆனால் சிறுவயதில் என்னக்கு வறுமையின் அடையாளமே தெரியாது,
ஏன் அந்த சிறுவனக இன்னும் நான் இல்லை,
போதுமான வருமானம் இல்லை என்றால் இந்த நிலை என்று உணரும் தறுவாயில்,
நான் பயணிக்கிறேன் வாகனத்தில்; இதுவே என் முதலும் கடைசி பயணமும்,
சாலையில் அடிபட்டுக் கிடந்த என்னை அவசரசிகிச்சை உறுதியில் எடுத்து செல்கிறார்கள்,
இன்று என் வறுமையின் நிலையை எண்ணி வருந்திய நாள்,
இப்படி ஒரு வறுமை தேவையா; இல்லை எப்போது வறுமை அழிகிறதோ அப்போது பலரின் வாழ்வு வண்ணம் உதிக்கும்.