STORYMIRROR

Arivazhagan Subbarayan

Others

4  

Arivazhagan Subbarayan

Others

விழியுணராச் சுவர்கள்...!

விழியுணராச் சுவர்கள்...!

1 min
31


கர்வத்தின் சுவர்கள்

அன்பெனும் அழகைச்

சிறையிலடைத்து

அடிமைப்படுத்தும்போது

அறிவெனும் புரிதல்

மதி மயங்கி

விவாதத்தில்

வீறுகொண்டு எழுந்து

சகமனிதனைத்

தோற்கடித்த ஆனந்தத்தில்

நெஞ்சம் விம்மிப் புடைக்க

வீறு நடைபோட்டு

சிதைத்த மனங்களைக்

குரூரத் திருப்தியோடு

கோபத்தின் துணைகொண்டு

இரணமாக்கி

விவாதப் போர்க்களத்தில்

வெற்றிகொண்டு

வீடு திரும்பி

சின்னக்குழந்தை

தன் தோழியிடம்

'நீயே இதுல விளையாடு அழாதே' என்று சொல்வதைக்

கேட்ட போதுதான்

தோற்றுப் போனவன்

நான்தான் என்று

மண்டையில் உறைத்தது!



Rate this content
Log in