வா எழுந்து வா
வா எழுந்து வா
திரை வானில் உதித்திட்ட நகைச்சுவை ஞாயிறு!
கலை வானில் ஜொலித்திட்ட மக்கள் கலைஞன்!
சந்திரனால் உதயமான பகுத்தறிவு பகலவன்!
நகைச்சுவையில் விவேகத்தையும் ஆனந்தத்தையும் வழங்கிட்ட விவேகானந்தன்!
காமெடிஉணவில் கருத்துக்களை மருந்தாய் கலந்திட்ட கலைவாணன்!
சாதிபேதத்தை சுட்டிய சமத்துவ கலைஞன்!
மூடப்பழக்கங்களை சாடிய பெரியார்!
ஏழைகளும் கல்வி பெற உதவிட்ட நல்மனிதன் !
இளைஞர்களிடையே எழுச்சியூட்டிய கலாமின் சீடன்!
சமூகக்கறைகளைக் வசனத்தில் காட்டிய நற்சிந்தனையாளன்
நீர் ஆரம்பித்த கிரீன் கலாம் திட்டம்...
ஸ்கிரீனைத் தாண்டி சலாம் போடும் நித்தம்!
மரணத்தின் போது மலர்மாலையைத் தான் சனம் கண்டிருக்கிறது!
உம் மரணத்தின் போது மட்டும் தான் மரக்கன்று நின்றிருக்கிறது!
உம் கனவு இதன் மூலம் வென்றிருக்கிறது!
தமிழ் மண்ணில் அதற்கான சான்றிருக்கிறது!
நீ போட்ட புரட்சி வித்துக்கள் மனதில் வளரத் தொடங்கியிருக்கிறது!
NEVER GIVE UP!
LET'S TRY ONCE AGAIN...
என்றாய்!
மாரடைப்பு உனைத் தடுத்திருக்கலாம்...
மரணம் உனை வென்றிருக்கலாம் ...
மரணத்திடம் தோற்றுவிட்டோம் என துவண்டு விடாதே!
மண்ணில் உன்னிடம் காலியாகவே இருக்கும்!
முயற்சி செய் இன்னும் ஒருமுறை!
நீ ஊன்றிய மரங்களின் நிழலில் வாழ....
காற்றை சுவாசிக்க...
நல்கருத்துக்களை தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க....
வா! எழுந்து வா!
புதிது புதிதாய் விவேக சிந்தாமணி இயற்ற...
அதை நாங்கள் நாளும் ரசித்துப் போற்ற!
வா! எழுந்து வா!
Try once again!