STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

துயில் எழுப்பினாள்

துயில் எழுப்பினாள்

1 min
171

பகலெல்லாம்... 

பார் முழுவதும் சுற்றித் திரிந்து....

மக்களுக்கும் மாக்களுக்கும்...

புல்லுக்கும் புள்ளினத்திற்கும்

ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்து...

ஓய்வை நாடி உறக்கத்தில் அமிழ்ந்து....

வானமாகிய பாயை விசாலமாய் விரித்து...

திங்களின் ஒளியில் இரவெல்லாம் இளைப்பாறிய பகலவனை... 

மார்கழியானவள் பனிநீரை தெளித்து ...

துயில் எழுப்ப....

திடுக்கிட்ட ஞாயிறு....

 தன் கதிர்க்கரங்களால்....

மேகமாகிய மெல்லிய போர்வையை விலக்கி....

 மெல்ல தன் சுடர் முகம் காட்டுகிறான்!



Rate this content
Log in