STORYMIRROR

Deenadayalan Adimoolam

Others

3.2  

Deenadayalan Adimoolam

Others

தேனீருடன் ஒரு குளியல்

தேனீருடன் ஒரு குளியல்

1 min
62


தூரம் பார்க்காமல் துயரம் போக்கும் தேனீரை தேடி....


ஆவி பறக்க, 

நுரை விலக பருகி, 

மனம் சிறகு அடிக்க தொடங்கி, 

கடைசி சொட்டையும் விழுங்கி, என் பொண்டாட்டி

டீயிடம் மண்டியிட்டு மடங்கினேன்..


பாலின் நிறம் மாற்றினாய், தலை கரு முடியையும் நரை ஆக்கினாய் ... 


தளர்ந்த நேரத்தில் டீ, நீ என்னுள் நுழைந்தாய் மனம் திறந்தாய் 


சில கொதியில் இறக்கினேன், என் கோவம் எனும் கொதிப்பை இறக்கினாய்


படபடப்புடன் மனது ஒரு நொடியில், சுடச்சுட டியினால் சுறு சுறுப்புடன் துள்ளியது..


நுரைக்குள் நீயோ !ஒளிந்தாய், என் உதட்டால் உன்னை பிடித்தேன், உன் தோட்டம் நுழைவதை உணர்ந்தேன்..


நிறம் திடம் சுவை இவைகளால் புத்தூயிர் பெற, உன் மனக்கவலை மற, தாய்மடி உணர்ந்தேன்..


காலையில் என் கையில், என்றும் எனக்கு புத்தம்புது விடியல்..

அந்தி மாலை மழையில் சுவைத்தேன், என் மனதில் மழைத்துளி விழுவது போல உணர்ந்தேன்..


பலவகை டீயை பலமுறை ருசித்தேன், சிலவகை மனிதர்களை கண்டு வியக்கிறேன்


உயிர் போகும் தருணம், கைகளில் டீ கோப்பையுடன் மரணம் வேணும்!!


தேனீர் இன்றி அமையாது உலகு, தேனீருடன் இணையுது நம் மனது...



Rate this content
Log in