பரிதாப பிறவி🐇🐇🐇🐇🐇🐇
பரிதாப பிறவி🐇🐇🐇🐇🐇🐇
ஓடி களைத்த முயலை
நடந்து வெல்லும் ஆமை
முயலுக்கு குட்டிகள் பஞ்சபூதம் போல் ஐந்து
அல்லது திசைகள் எண்ணிக்கையாய்
எட்டு...
பூதங்கள் காத்தால் முயல் குட்டி பிழைக்கும்
அன்றேல் மிருகங்கள் வாயில் இரையாகி மரிக்கும்...
திசையெட்டில்
முயல் குட்டிகள் தப்பித்தால் பிழைக்கும் அல்லது
நாயிற்கும் மனிதர்க்கும் உணவாகும்...
முயல் குட்டியை கற்பனையாய் விண்மீனாய் கவியாக்கியவர் உண்டு
முயலை விற்பனையாய் கடைகளில் விளம்பரம் ஆக்கியவர் உண்டு
கற்பனை பொய்த்தாலும் வியாபாரம் பொய்க்காது ...
பேசாத தாவரங்களே முயல்களின்
வாழ்வாதாரம்...
வியாபார முயல்களே
விற்பனையின்
மூலாதாரம்...
முயலிடம்
நஞ்சுமில்லை
நய வஞ்சகமுமில்லை...
எதிர்ப்பு உறுப்புகளும் இல்லை...
முயல் போராடிய நிகழ்வுமில்லை...
பாலூட்டதெரியும் ..
.பாசம் உணரத் தெரியும் பாவி மனிதர்களை
அது அறியவில்லை...
தன் பசிக்கு உண்டு பிறர் பசிக்கு உணவாகும் பரிதாப பிறவியே முயலாகும்...
முயல் தன் பசிக்கு யாரிடமும்
யாசகம் கேட்டதும் கிடையாது ...
தன் கொலைக்கு யாரிடமும் நியாயம் கேட்டதும் கிடையாது
முயல்வது
வாழ முயல்வது
மனித குணம் ...அது முயல் வாழ
வழி வகுக்கும் மனித இனமாக மாறட்டுமே...
முயல் வாழ வைக்கக்கூடிய அரிய இனம் என்று ...
அதை ஆதரித்து காப்போம் ...
ஆகாரம் ஆக்கிடாமலே
முயல் அன்பின்
ஆதார இனமென்று அரவணைத்து வளர்ப்போம்...
முயலெனும் பாலூட்டிகளிடம் தாய்ப்பாசம் காப்போம்...
முயல்வோம் இச்செயலுக்கு முயல்வோம் ...
முயல் காப்போம்
முயல் நேசித்து முயல்வோம்
முயல் காக்க ......
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇