STORYMIRROR

Uma Subramanian

Others

5  

Uma Subramanian

Others

ஒத்தையில நிக்குறேன்

ஒத்தையில நிக்குறேன்

1 min
851

தாயவள் பெத்துப் போட்டா


தனித்து என்னை விட்டுப்புட்டா


மழையும் வெளுத்து வாங்குது


உடம்பு எல்லாம் நடுங்குது


ஒதுங்க கூட இடமில்ல


வயித்துப் பசி ஆறல


வாரியணைக்க ஆளில்ல


ஒண்டி வாழ நிழலில்ல


அண்டிப் பிழைக்க வழியில்ல


ஆத்தாள அழைச்சேன் வரவில்ல


கத்தி நானும் பார்க்குறேன்


கண்டுக்கிட யாருமில்ல


ஒத்தையில நிக்குறேன்


உசுரு போக கத்துறேன்! 


ஆதரவில்லா உலகத்துல


ஆண்டவனே எதுக்கு படைச்ச?


Rate this content
Log in