STORYMIRROR

Arivazhagan Subbarayan

Others

4  

Arivazhagan Subbarayan

Others

இறையே சரணம்...!

இறையே சரணம்...!

1 min
21


சிந்தையில் தெளிவும் 

சீர்கூர் மதியும்

எந்தையே எமக்கருள்வாய்

உந்தனுடன்

உறைந்துய்யும் நாளேயென்துன்பச்

சிறையறும் நாளாம்!

நின்சீரடி சரணம்!


அகந்தையை அறுக்க

ஆசை ஒழிக்க

இகழ்புத்தி இன்றேதொலைக்க

சுகந்தமலரைச்

சூடியஇறைவன் திருவடியழகை

நாடிச் சென்று

நற்கதி யடைவோம்!


யாக்கையும் மனதும்

தேக்கிய கசடைத்

தூக்கி யெறியத்

துணைவா அருள்வாய்!

ஊக்கமுடன்

உன்னடி தினமும் தொழுதிடும் உள்ளம்

இன்னல் அகற்றி என்றும் அருள்வாய்!



Rate this content
Log in