அம்மா!!
அம்மா!!
அம்மா என்றால் அழகு,
அம்மா என்றால் அறிவு,
அம்மா என்றால் உலகம்,
அவளே குடும்பத்தின் பல்கலைக்கழகம்!!
அம்மாவை வாழ்த்திப் பாட வார்த்தைகளை எங்கே தேடுவது,
அம்மாவின் அர்த்தம் காண
எவர் தம் நூலை நாடுவது,
அள்ள அள்ள குறையாத அன்பு
உடலெல்லாம் நிறைந்து போன பாசம்
தன் இடையில் தாங்கி,
காலம் முழுதும் மடியில் தாங்கும் அறிதற்கரிய வரம்!!
தன் ஆசைக்கு உழைக்காத சேவாசகி!!
ஒரு நாளும் ஓய்ந்து போகாத தேனீ!!
பிள்ளைகளின் வாழ்க்கையில் தினம் ஒரு படிவைக்கும் ஏணி !!
நல்வினை என்பது பெண்ணின் பிறப்பு!!
அம்மா என்பது அழகின் வனப்பு!!