STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

உயிர் காப்பான்

உயிர் காப்பான்

1 min
182

மணி என்பவர் தனது 10 ஏக்கர் நிலத்தை விற்பதற்கு முடிவு செய்தார். அந்த நிலம் அடர்த்தியான மரங்கள் சிறிய பூச்செடிகள் மருத்துவம் சார்ந்த செடிகள் கொண்ட ஒரு சிறிய காடு எனலாம். காட்டை காண்பித்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என முடிவு செய்து அங்கு உள்ள மரங்கள் செடிகள் என அனைத்தையும் வெட்டுவதாக முடிவு செய்தார். மணியின் மனைவியும் மகளும் எவ்வளவோ தடுத்தும் அவர் தன் முடிவை மாற்றவே இல்லை. மணி நண்பரே அந்த இடத்தை வாங்கி அதில் ஒரு பெரிய கடை திறக்க முடிவு செய்தனர். 

     அந்த நிலத்தில் மரங்களை வெட்டும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது. அதேவேளையில் மணியும் ஒரு விஷக்காய்ச்சலால் அவதி அடைந்தார். வேதனையும் வலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த காய்ச்சலை குணப்படுத்த மருத்துவர்கள் ஒரு வேரின் பெயரை கூறினார்கள். அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது மணியின் மகள் "இந்த வேர் நமது தோட்டத்தில் வளர்ந்தது அப்பா" என்று கூறினாள். அதை எடுத்து வர மணி கூறினார்.

ஆனால் அப்பொழுது தான் அவருக்கு ஞாபகம் வந்தது அந்த செடியை வெட்டி விட்டோமென்று. இவரை நிலையை பார்த்து பரிதவித்து போன மனைவியும் மகளும் அந்த நிலத்திற்கு சென்று அந்த வேர் ஒன்றாவது ஆவது மிஞ்சி இருக்காதா என்று பார்க்க சென்றனர். அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு அங்கு அந்தச் செடிகள் இரண்டு நின்றன. அதை எடுத்து மருத்துவம் பார்த்தனர். மணியும் குணமடைந்தார். குணமடைந்த பின் அவரது மனைவி இந்த பேரும் இந்த நிலவும் தான் உங்களை காப்பாற்றியது என்று கூறினாள். மணி அப்பொழுதுதான் ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு உயிரின் காவலாளி என்று உணர்ந்தார். கடை திறக்கும் எண்ணத்தை விடுத்து அந்த நிலம் மட்டுமின்றி அந்த நிலத்தின் அருகில் உள்ள இடங்களையும் வாங்கி அதில் ஒரு காட்டை உருவாக்கினார். அதை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாற்றினார். வரும் அனைவருக்கும் ஒரு பூச்செடியை இலவசமாக அளித்தார். வாழ்வை இயற்கையோடு கழிக்கும் பாக்கியத்தை பெற்றார்.


Rate this content
Log in