மந்திரவாதி
மந்திரவாதி
ஒரு அழகிய நகரத்தில் மாலை வேளை,வானத்தில் அழகான
நிறங்களில் வானவில் தோன்றி இருந்தது.
நகரின் மையத்தில் அமைந்து இருக்கும் பெரிய மண்டபத்தில் தந்திர நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருந்தார் அகிலன்.
அவர் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்.
குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்து இருக்க பல நிகழ்வுகளை நடத்தி கொண்டு இருந்தார்.ஒரு குழந்தையை வர சொல்லி கையில் ஒரு கை குட்டையை கொடுத்து
அவருடைய தொப்பிக்குள் வைக்க
அது ஒரு சேவலாக மாறி வெளியில் வந்து கொக்கரக்கோ
என்று கத்தியது.
நிகழ்வுகளின் உச்ச கட்டமாக அந்த சேவலை மறுபடியும் ஒரு கூடைக்குள் போட்டு வேறு ஒரு குழந்தையை வர சொல்லி திறக்க சொன்னார்.திறந்ததும் ஒரு அழகிய பெண் வானவில் நிறதஇல் உடை உடுத்தி வெளியில் வர
எல்லோரும் உற்சாகத்தில் கை
தட்டி வரவேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த நிறைய பேர் அவருடன் சுய படம் எடுத்து கொண்டனர்.