வல்லவனுக்கு வல்லவன்
வல்லவனுக்கு வல்லவன்
காலையில் எழுந்து....
கடமைகளை முடித்து.....
கால்நடைகளை அழைத்து....
கழனிகளில் மேய்த்து....
காய்ந்த விறகுகளை ஒடித்து....
கீரைகளை மடியில் முடித்து....
கனிகளை உண்டு வயிறை நிறைத்து....
கதிரவன் சாயும் வேளையில்
அவைகளுக்கு
குடிநீரை கொடுத்து....
கட்டுத்தெருவில் கட்டி...
காய்ந்த வைக்கோலை
காரிருளில் உணவாக்கி...
கால்நடைகளையும் ஓர் குடும்ப அங்கத்தினர்களாய் கொண்டாடினர்!
காடுகளிலும் கழனிகளிலும்...
காளைகளோடு கூடி குலவி...
கலவி புரிந்து கருத்தரித்து ...
கன்றை ஈன்று கரவை புரிந்த...
மாடுகளையும்.... இன்று
மனிதன் தன்னைப் போல்...
காலாற நடந்து போக விடாமல்...
கூடி மேய்ச்சல் நிலங்களுக்கும்
செல்ல விடாமல்.....
கட்டுத்தெருவிலேயே தனிமைப் படுத்தி...
புதுமை எனும் பெயரில்...
வெண்மை புரட்சியென...
கால்நடைத் தீவனத்தால் வயிறை நிறைத்து...
கருத்தரிப்புக்கொரு ஊசியைக் குத்தி....
ஆயிரம் ஆயிரம் முறைகளில்...
அதன் இரத்தத்தை உறிஞ்சி
பாலாக்கி.. காசு பார்த்து
களிப்புறும் மனிதா!...
இயற்கைக்கு மாறாக இன்னும் எத்தனை?
ஆளப்பிறந்தவன் தான் நீ!
இயற்கை நியதிகளை மாற்றி
ஆட்டிப் படைக்காதே!
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு மறந்து விடாதே!
இயற்கைகளை இம்சித்து விடாதே!
வாழு.... ! இயற்கையோடு ஒன்றி வாழு!
வாயில்லா ஜீவனையும் வாழ வடு !
