இளைய சமுதாயம்
இளைய சமுதாயம்
1 min
34
கண்டதைக் கற்று
பண்டிதன் ஆகாவிட்டாலும்
கண்டதை வாங்கி
குடித்து சமுதாயத்தின் இழிநிலை
அடைய வேண்டாமே!
வீழ்ந்தால் அருவியாக விழ
வேண்டுமே தவிர
போதையால் மயங்கி நிலம்
பார்க்கவா தாய் படைத்தாள்!
கள்ளிச் செடியும் முள்ளும்
நிறைந்த வாழ்க்கையில்
பாதை பார்த்து நடப்பதுபோல
பாதையான சான்றோர் வழி
கேட்டு நடந்திட்டால்
உலகம் இளைய சமுதாயத்தை உற்றுப் பார்க்கும்!