ஏதும் இல்லை
ஏதும் இல்லை
தொலைத்திட ஏதும் இல்லை எனும் போது,
எதையும் எதிர்க்கும் துணிவு நம்மிடம் தானாக வந்து சேர்ந்திருக்கும்,
எதை பற்றியும் கவலை பட வேண்டிய எண்ணம் இருக்காது,
பயம் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும்,
யாரையும் சார்ந்திருக்காமல் மனதில் தோன்றியவற்றை செய்யும் அளவுக்கு மாறி இருப்போம்,
வெற்றி, தோல்வி எதுவும் நம்மை பாதிக்காத ஒரு வெற்று காகிதமாக மாறி இருப்போம்,
இனி நினைப்பது, எழுதுவது, செய்வது என எல்லாம் உனக்கானதாகவே இருக்கும்.....