கற்கை நன்றே
கற்கை நன்றே
ஒரு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தில் அப்பா முருகன், அம்மா செல்வி பாப்பா, அமுதா என நான்கு பேர் வசித்து வந்தனர்.
அதே ஊரில் மற்றொரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அப்பா கணபதி, அம்மா கஸ்தூரி, நித்திலா என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
அமுதாவும் நித்திலாவும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். அவர்களின் வகுப்பில் அமுதா எப்போதும் முதல் மதிப்பெண் பெற்று வந்தால்.இதனால் நித்திலாவிற்கு அமுதாவின் மீது சற்று பொறாமை ஏற்பட்டது. அமுதா எப்படி தவறாமல் முதல் மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் மாணவியாக வருகிறாள் என்று நித்திலா தெரிந்து கொள்ள விரும்பினாள். அதன் காரணமாக அடுத்த நாள்,காலை அமுதாவிடம் சென்று நீ மட்டும் எப்படி வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுகிறாய்? என்று எனக்கும் சொல்லு, என நித்திலா கேட்டாள். அமுதா கூறினால், நான் வகுப்பில் ஆசிரியர் கற்பிப்பதை அன்றே படித்து, அன்றே பாடங்களை தவறாமல் முடித்து விடுவேன். அதனால்தான் வகுப்பில் என்னால் முதல் மதிப்பெண் பெற முடிகிறது, என்று கூறினாள். நீயும் படிக்க விரும்பினால் இன்றிலிருந்து என்னோடு சேர்ந்து படிக்கலாம்.உனக்கு விருப்பமா? என்று வினவினாள், அமுதா. நித்திலாவும் அதனை ஒப்புக்கொண்டாள். அடுத்த நாளே இருவரும் ஒன்றாக சேர்ந்து எந்த போட்டியும்,பொறாமையும் இல்லாமல் நன்றாக படித்தார்கள். இருவரும் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தனர்.
நீதி: ”பொறாமை இன்றி வாழ்ந்தால் எதையும் சாதிக்க முடியும்”.
