குழந்தை தொழிலாளர்
குழந்தை தொழிலாளர்
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.அந்த பள்ளியில் முருகன் என்ற மாணவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவன் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் டீக்கடை ஒன்றை கடந்து செல்வான்.
அந்த டீக்கடையில் அவன் வயது பையன் ஒருவன் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதை முருகன் கவனித்தான்.
அதனால் முருகன் அந்த பையனிடம் சென்று கேட்டான், நீ ஏன் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்கிறாய்? அதற்கு அந்த பையன் ஏதும் பதில் கூறாமல் கடந்து சென்றான்.அவனும் கடந்து சென்று விட்டான். நாட்கள் நகர்ந்தன.
ஒரு நாள் பள்ளியில் முருகன் குழந்தை தொழிலாளர் பற்றி பாடம் எடுத்தார்,ஆசிரியர்.
அந்த பாடத்தில் குழந்தை தொழிலாளர்களை எங்கு கண்டாலும் 1098 என்ற எண்ணிற்கு அழைத்து தகவலை கூறினால் அந்த மாணவன் படிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று ஆசிரியர் கூறினார். இதனைக் கேட்டவுடன் முருகனுக்கு அந்த டீக்கடையில் வேலை செய்யும் மாணவனை பற்றி நினைவுக்கு வந்தது.
மாலை வீடு திரும்பியதும் முருகன் 1098 என்ற எண்ணிற்கு தகவல் கூறினான். அந்த தகவல்கள் மூலம் அவனை குழந்தை தொழிலாளி என்னும் அடையாளத்தை மாற்றி மாணவன் என்னும் அடையாளத்தை தந்தனர்.
அந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள்.அதனால் சில நாட்களில் அந்த மாணவனும் முருகனுடன் சேர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தான்.
இருவரும் நண்பர்களாக மாறி மகிழ்ச்சியுடன் பள்ளியில் கல்வி கற்க ஆரம்பித்தனர்.....
நீதி : கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே...
