STORYMIRROR

Sathana suthip

Children Stories

4  

Sathana suthip

Children Stories

பொம்மை

பொம்மை

1 min
389

ஒரு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது அந்த குடும்பம் ஒரு நாள் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தது.

 அடுத்த நாள் காலை மொத்த குடும்பமும் கோவிலுக்கு கிளம்பியது.பயணத்தின் போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் ஒரு விபத்தின் காரணமாக இறந்து விட்டார்கள். அவர்களின் மகன் தாய் தந்தையின்றி அனாதையாக மாறினான். அவனுக்கு விபத்தில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.அவனுக்கு சொந்த பந்தம் என்று ஏதுமில்லை.உணவிற்காக ஏங்கி வந்தான்.அவன் உணவு இல்லாமல் தனியாக அவன் வீட்டில் வசித்து வந்தான்.


 யாருடைய உதவியும் இல்லாமல் அவன் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் ஒரு முன்னேறும் வழியை சிந்தித்தான்.


 அவனுக்கு களிமண் மூலம் பொம்மை செய்யும் திறன் இருந்தது.எனவே களிமண் பொம்மை செய்து விற்க முடிவெடுத்தான்.


 களிமண்ணை கொண்டு பல்வேறு விதமான பொம்மைகளை அழகழகாக வடிவமைத்தான்.

 மக்கள் யாரும் முன் வந்து அந்த பொம்மைகளை வாங்கவில்லை.


 மீண்டும் மீண்டும் சிந்தித்தான். பொம்மைகளுக்கு வண்ணம் பூசும் எண்ணம் அவனிடையே தோன்றியது. அந்த பொம்மைகள் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


 தினமும் மாலை நேரங்களில் பொம்மை செய்து விற்கத் தொடங்கினான். பகல் நேரங்களில் பள்ளியில் சென்று படிக்கலானான். அவனுடைய வாழ்க்கையை அவனே தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டான்.


 நீதி : தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் வாழ்வில் ஜெயிக்கலாம். 


Rate this content
Log in