மாற்றம்
மாற்றம்
ஒரு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தில் தந்தை முருகன்,அம்மா கண்ணகி, மகன் பாலன் மற்றும் மகள் ஜனனி ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.
அவர்களின் வீட்டில் எப்போதுமே பாலனின் ஆட்சிதான்.பாலன் தனது தாய் தந்தையிடம் எதைக் கேட்டாலும் உடனடியாக வாங்கித் தந்து விடுவார்கள்.அதுவே ஜனனி கேட்டால் அது எல்லாம் வீண் செலவு,என்று கூறிவிடுவார்கள்.
மகன் எதை செய்தாலும் அவனை கண்டிக்க மாட்டார்கள்.அதுவே மகள் செய்தால் அவளை கண்டிப்பார்கள்.அவர்களுக்கு மகன் என்றால் அன்பு அதிகம்.ஏனென்றால் அவன் தான் தங்களை வருங்காலத்தில் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்று, அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.
அதனால் மகனுக்கு செல்லம் கொடுத்து வந்தார்கள். அதே சமயம் ஜனனியை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள்.அவள் எப்படியும் வேறு வீட்டுக்கு வாழ போகிறாள், என்று அவளை செல்லம் கொடுக்காமல் வளர்த்தார்கள்.
சில வருடங்கள் கழிந்தன.இருவருக்கும் திருமணம் நடந்தது பாலன் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ தனது தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான்.அதே சமயம் ஜனனி தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.அவள் தன் தாய் தந்தையின் நிலையைக் கண்டு மனம் வருந்தி அவர்களை வீட்டிற்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டால்.
முருகனும் கண்ணகியும் தங்களின் செயலை எண்ணி கவலை உற்றார்கள். ஜனனி வீட்டில் அவளும் அவள் குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
நீதி : அன்பும் கண்டிப்பும் சேர்ந்து வளரும் குழந்தை ஆல மரமாக விருட்சம் பெறும்.
