STORYMIRROR

Sathana suthip

Children Stories Children

4  

Sathana suthip

Children Stories Children

உண்மைக்கான பரிசு

உண்மைக்கான பரிசு

1 min
236

ஒரு ஊரில் ஒரு பள்ளி இருந்தது.அந்த பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வைத்தார். தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் விடைத்தாள்களை திருத்த ஆரம்பித்தார். மறுநாள் வகுப்பில் மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கினார்.


வகுப்பில் 22 மாணவர்கள் 21 மாணவர்கள் விடைத்தாள்களை பெற்றுக் கொண்டனர்.கடைசி மாணவனாக சுதீப்பின் விடைத்தாளை வழங்கினார். அவன் அத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்றிருந்தான். அதனால் ஆசிரியரும் மாணவர்களும் வியந்து அவனை பாராட்டினார்.


ஆசிரியர் அவனுக்கு ஒரு எழுதுகோலை பரிசாக வழங்கினார். ஆனால் சுதீப் அந்த எழுதுகோலை வாங்க மிகவும் தயங்கினான். அதை கண்ட ஆசிரியர் ஏன் தயங்குகிறாய்?என்று கேட்டார். அதற்கு சுதீப் தயக்கத்துடன் கூறினார்,நான் எனது முழு முயற்சியில் இந்த முழு மதிப்பினை பெறவில்லை,என்று கூறினான்.


ஆசிரியர் அப்படியா? என்று கேட்டார். சுதீப்,ஆம் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்.நான் எனது நண்பனிடம் கேட்டு ஒரு கேள்விக்கு விடை எழுத நேரிட்டது. ஆகையால் இந்த பரிசினை பெற்றுக்கொள்ள எனது மனம் ஒத்துக்கொள்ளவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்,என்று மிகவும் வருந்தினான்.

ஆசிரியர் அவனை மன்னித்ததுடன் அந்த பரிசை அவனுக்கே வழங்கினார்.மேலும் இது போன்ற தவறை இழைக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தினார்.


 நீதி: நெஞ்சறிந்து பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


Rate this content
Log in