STORYMIRROR

Balaraman Kesavalu

Others

4  

Balaraman Kesavalu

Others

அம்மா

அம்மா

1 min
315

உயிர் வாங்கி

உயிர் வளர்த்து

உயிராய் இருப்பவள்

அம்மா


நம்முள் உதிரம் சேர

தன் உதிரத்தைப் பாலாக்கி

ஊட்டுபவள் அம்மா


தனக்கு இல்லாவிடினும்

குழந்தைக்கு உணவூட்டி

தண்ணீர் குடித்து

பசியாற்றிக்கொள்வாள்

அம்மா


ஆபத்து நேரத்தில்

அம்மா என்றழைத்தாலே

ஓடோடிவந்து

காப்பவளே அம்மா


அம்மாவைவிட நாம்

உயரே வளர்ந்தாலும்

அன்பு,பாசம், நேசம்

உயர் குணங்களில்

அவளே எட்டமுடியாத உயரம்.


 


Rate this content
Log in