தன்முனைக் கவிதைகள் 1
தன்முனைக் கவிதைகள் 1
1 min
328
1
யாரையும் நான்
போலி செய்வதில்லை
எண்ணிலக்கணங்கள் போதும்
நான் இலக்கியமாக
2
மௌனங்களை முகமூடிகளாய்
அணிந்திருக்கிறோம் நாம்
நத்தையாய் ஊர்கிறது
நம்மிடையே நேரம்
3
உன் கேள்விகளின் வெம்மை
என் பதில்களைச் சுடுகின்றன
வாழ்வைத் தொலைக்கும் நான்
சாம்பலில் கவிதை செய்கிறேன்
4
ஒரே மிடறாகத்தான்
குடித்திட பேராசை
உன்கண்களில் வழியும்
காதல் மொத்தத்தையும்
5
என் கவிதைப் புத்தகத்தில்
சில வெற்றுப் பக்கங்கள்
என்றாவது உன் அன்பை
கவிதை ஆக்கிடும் நம்பிக்கையில்
