ஆகாய வானிலே
ஆகாய வானிலே
1 min
155
ஆகாயம் என தீண்டிட
மேகத்தை கடனாய் கேட்டேன்
ஞானத்தை தீண்டிட
பகுத்தறிவை கடனாய் கேட்டேன்
வண்ணத்தை ஓவியம் தீட்டிட
வானவில்லை கடனாய் கேட்டேன்
மெய்யினை மானிடன் உணர்ந்திட
நேர்மையை கடனாய் கேட்டேன்
தேவைகள் காரணியாய் இருந்திட
உழைப்பை கடனாய் கேட்டேன்
இவ்வனைத்தையும் பெற்றிட
இறைவனிடம் அருளினை
கடனாய் கேட்டேன்
இறைவன் சொன்னார்
கடனாய் பெற்றால்
நீீ கடன்காரன் ஆவாய்
உன் கடமையை செய்
உன் கனவுகள் பலிக்கும்
என்றாார் இறைவன்.