மயக்கும் மலர்கள்
மயக்கும் மலர்கள்
பல வித மலர்கள்
பல கோணத்தில் இதழ்கள்
பல வர்ணத்தில் உள்ள அவை
பல இன மக்களை நினைவூட்டுகிறது.
பல ஒழுங்கில் இதழ்கள்
பார்த்து மகிழ வைக்கிறது
பார்த்தாவது நீ அதை
பாடசாலையில் ஒழுங்காக நட.
சில பெண்களின் அழகில் மயங்கி
சில யுவர்கள் அவர்களை நாடி செல்வதுண்டு.
சில பூக்கள் அழகிலும், மணத்திலும் மயங்கி
சில தேனீ போன்ற பூச்சிகள் செல்வதுண்டு.
தன் கவர்ச்சியைக் காட்டி மயக்கி சில மலர்கள்
தன் இரையாக்கும் நாடி வரும் பூச்சிகளை.
தன் காம வெறியை தீர்க்க
தவித்து செல்வோருக்கு ஆபத்து சில பெண்கள் .
பூக்கும் மலர்கள் எல்லாம்
பூஜைக்கு உரியதில்லை
புன்னகை காட்டி மங்கும் பெண்கள்
புனிதமானவர்கள் என எண்ணாதே
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
‘பதின் ரெண்டு வருடத்துக்கு ஒரு முறை
பார்ப்பவர் கவரும் மலர்
பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர்
பரிசு பெற்ற பெருமை அதுக்குண்டு
தொட்டவுடன் அழகிய அனித்த மலர்
துவண்டு விடுவது போல்,
தொட்டவுடன் பெண்கள் சிலர்
துவண்டு விடுகிறார்கள் ஆடவர் கைகைளில்
காலத்தோடு மலரும் பூக்களை
காத்திருந்து கண்டு பலர் மயங்குவர்
கார்த்திகை மலருக்காக
காத்திருப்பர் மாவீரர் தினம் நினைவாக.
இராஜக்குமாரி என்பர் ரோஜாமலரை
இரவெல்லாம் பூக்கும் இரவின் அரசி மலர்
இரவியின் வருகையை காத்து நிற்க்கும்
இரவி காந்தி என்ற சூரியகாந்தி மலர்
மல்லிகைக்கு மதுரை
மணத்துக்கு மல்லிகை
மகளிர் விரும்புவது மல்லிகை
மல்லிகை முல்லை பூப்பந்தல்.
காட்டில் பூக்கும் மலர்களில்
காணும் போது கவர்ச்சியுண்டு
குளத்தில் பூக்கும் தாமரை
கற்றுத் தருவது எமக்குப் பண்பாடு .
****