“
நில்லாது சுழற்றினாய்
உன் முன்னே பம்பரம் ஆனேன் !!
கட்டளைகள் நீ இட
உனக்கான சேவகன் ஆனேன் !!
இருவிரல் நீட்டி சுட்டாய்
தரையில் மயங்கி நடிகன் ஆனேன் !!
தலை கொதி நகைத்தாய்
மடியில் மடிந்து மழலை ஆனேன் !!
கணக்கில்லா ஆனந்த புன்னகையின் சிறை நீ ,
அதில் மனதார வாழும் கைதி ஆனேன் ❤️
”