கல்வியா? அனுபவமா?
கல்வியா? அனுபவமா?
1 min
160
இச்சமுகமானது, வாழ்க்கையை
இப்படித்தான் வாழ வேண்டும் என்றும்;
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் கூறுகிறது;
பணத்தை செலவழிக்காவில்லையெனில் கஞ்சன்;
பணத்தை செலவழித்தால் ஊதாரி;
சிரித்தால் மூடன்;
சிரிக்காவிடில் வஞ்சகன்;
பேசினால் பைத்தியக்காரன்;
பேசாவிடில் ஊமை;
இவைகளை சமாளிக்க நம்மிடம் இருக்கும் ஒரு கருவியே"அறிவு"
அறிவு, அதனை நாம் எப்படி பெறுவது?
கல்வியின் மூலமா?
அனுபவத்தின் மூலமா?
கல்வியின் மூலம் பெறும் அறிவு சிறந்தது;
அதனைக் காட்டிலும் சிறந்தது,
அனுபவமே, அனுபவங்களின் மூலமே அறிவைத் தேட முடியும்.
