தாய்மை
தாய்மை
என் அன்பிற்குரிய வாசகர்களே, வணக்கம். நான் உங்கள் ராதா, எனக்கு இதுதான் முதல் முறை தாய்மையும் கதை எழுதுவதும், எல்லோருக்கும் அப்படித்தானே. சரி இப்போது கதைக்கு வருவோம் அதாவது என் கதை. ஒரு பெண்ணிற்கு எப்போது தாய்மை என்ற உணர்வு ஊட்டப்படுகிறது என்பது பற்றிய என் கருத்து.
முதன் முதலில் நான் கருவுற்றிருக்கிறேன் என்று என்னுள் ஒரு உணர்வு தோன்றி நான் பரிசோதித்து பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது முதல் எனக்குள் ஏதோ ஒரு புதுவித மாற்றம் ஒரு பட்டாம்பூச்சி என்னுள் பறப்பது போல ஒரு பக்கம் ஆனந்தம் ஆனால் மற்றொரு பக்கம் ஒருவேளை கருவுறமல் இருந்தால் என்ன செய்வது என்ற பயம் பதட்டம். இது எல்லாம் இருந்தாலும் சோதித்து பார்க்க முடிவு செய்து pregnancy test kid வாங்கி சோதித்து பார்த்தேன். அப்போது ஒரு 5 வினாடிகள் அந்த கருவியையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். 5 வினாடிகள் கழித்து அந்த கருவியில் வந்த அந்த இரண்டு கோடுகள் நான் கருவுற்று இருக்கிறேன் என்பது உறுதியாகிய அந்த தருணம் என் கண்களில் நீர் பெருகி அளவில்லா ஆனந்தத்தில் என் அடிவயிற்றில் கை வைத்து நான் வருடிய தருணம் என் வாழ்வில் தாய்மை உணர்வு என்னுள் தோன்ற ஆரம்பித்தது...இதுவே என் தாய்மையின் துவக்கம்
