STORYMIRROR

Vetrivel M

Children Stories Children

4  

Vetrivel M

Children Stories Children

நேர்மை

நேர்மை

2 mins
431

ஒரு பெரிய நகரத்தில் உமா வாழ்ந்து வந்தாள். உமாவின் அம்மா அப்பா இருவரும் அந்த நகரத்திலேயே வேலை செய்து வந்தார்கள். உமாவின் பெற்றோர் அவளின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தார்கள். அதனால் உமா என்ன ஆசைபடுகிறாளோ அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். 


அவர்கள் எப்போதெல்லாம் சந்தைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவளுக்கு பரிசுகள் வாங்கிவிட்டு வருவார்கள். அவள் தன் பெற்றோர்களிடம் ரொம்ப செல்லமாக வாழ்ந்து வந்தாள். உமா ரொம்ப புத்திசாலி. அவள் படிப்பிலும் சிறந்து விளங்கினாள். அதுமட்டுமில்லாமல் எப்பவும் மற்றவர்களுக்கும் உதவி செய்யும் குணம் உடையவள். 


ஒரு நாள் உமா பள்ளிக்கு செல்லும் போது தன் வகுப்பிற்கு வெளியில் கூட்டமா பசங்க இருப்பதை பார்த்தாள். அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள உமா ஆசைபட்டாள். அவளும் அந்தக் கூட்டத்தின் அருகில் வந்து பார்த்த போது எல்லோரும் உமாவின் தோழியான ஜோதியின் புதுப் பேனாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். உமாவும் அந்தப் பேனாவைப் பார்க்கிறாள்.


 அவளுக்கு அந்த பேனா ரொம்ப பிடித்தது. அவள் ஜோதியிடம் ஒரு முறை அந்தப் பேனாவை கேட்டு வாங்கி தன்னுடைய புத்தகத்தில் எழுதி பார்த்தாள். அந்த நேரம் ஸ்கூல் பெல் அடித்தது. உடனே எல்லா பசங்களும் மைதானத்திற்கு விளையாட சென்றார்கள். 


அப்போது உமா வகுப்பிற்கு சென்றாள். அவளால் ஜோதி பேனாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்னொரு முறை அந்த பேனாவை ஜோதியோட பையிலிருந்து எடுத்து பார்த்தாள். அவள் அந்த பேனாவை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள நினைத்தாள். 


அப்போது அந்த வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது, அந்த அவசரத்தில் பேனாவை அவள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்.


உமா உடனே அங்கிருந்து விளையாட சென்றாள். ஆனால் அந்த பேனா அவள் பாக்கெட்டில் தான் இருந்தது. விளையாட்டு முடிந்ததும் 

 எல்லாரும் வகுப்பிற்கு சென்றனர். ஜோதி தன்னுடைய பேனா காணவில்லை என்பதை ஆசிரியரிடம் சொன்னார்.


உடனே ஆசிரியர் வகுப்பில் இருந்த எல்லோரையும் கேட்டார்கள். எல்லோரும் தெரியாது என்றனர். 


 கடைசியாக ஆசிரியர் “நான் உங்களுக்கு ஒரு நாள் டைம் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லனும் இல்லை என்றால் உங்களை தலைமை ஆசிரியரிடம் கூட்டிகிட்டு போக வேண்டியிருக்கும்” என்றார்கள். 


ஆசிரியர் சொன்னத கேட்ட உமா ரொம்ப பயந்து போய் ஒன்றுமே பேசாமல் இருந்தாள். அன்றைய வகுப்பு முடிந்து உமா வீடு திரும்பினாள். அன்று முழுவதும் அவள் செய்த தவறை நினைத்துக்கொண்டு இருந்தால். அவளால் அன்றைக்கு தூங்க முடியவில்ல. 


அடுத்த நாள் காலையில் உமா உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆசிரியர் வந்ததும் உண்மையை சொல்ல சொன்னார்கள். உமா ஆசிரியரிடம் “ அந்த பேனா என்கிட்ட தான் இருக்கு நேற்று உண்மையை சொல்ல நான் பயந்தேன். என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமேல் இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்” என்று சொன்னாள் உமா. 


வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் ரொம்ப ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உமாவை பார்த்தார்கள். 


உமா சொன்னத கேட்டு “உமா நீ ரொம்ப நேர்மையான பொண்ணு. எல்லோர் முன்னாடியும் வந்து தப்பை ஒத்துக் கொண்டார். அவ்வளவு சின்ன விஷயம் இல்லமா, நம்ம எல்லாரும் தப்பு பண்ணலாம் ஆனா நம்ம தப்பு உணர்ந்து அதை சரி பண்றது ரொம்ப பெரிய விஷயம். என்கிட்ட சத்தியம் பண்ணு இனிமேல் இது மாதிரி எதுவும் செய்யமாட்டேனு” என்று சொன்னார் ஆசிரியர். 


எல்லோரும் உமாவின் நேர்மையை பாராட்டி கைதட்டினார்கள்.


நீதி: நாம் தெரியாமல் தவறு செய்தாலும் உமாவை போல நம் தவறை திருத்திக் கொண்டு நேர்மையா இருக்க வேண்டும்.


Rate this content
Log in

More tamil story from Vetrivel M