STORYMIRROR

anuradha nazeer

Children Stories

4  

anuradha nazeer

Children Stories

அம்மா

அம்மா

1 min
657

ஒரு அம்மா தன் மகளை பள்ளி அனுப்புவதற்காக தலை சீவிக் கொண்டு இருந்தாள்.

உன் முகத்தில் ஏன் கோடுகளும் சுருக்கங்களும் விழுந்திருக்கின்றன. அம்மா எவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த சுருக்கங்கள் அசிங்கமா இருக்கிறது அம்மா. அப்போது அந்த குட்டிப்பெண் கேட்டாள்.


அதற்கு அந்தத் தாயார் அவளை பண்படுத்தும் நோக்கத்தோடு, நீ என்ன  விஷமம் செய்தாலும் உடனேயே என் முகத்தில் சுருக்கம் விழும் என்று அம்மா கூறினாள். கோடுகளும் சுருக்கங்களும் இருந்திருக்கின்றன.

நீ தப்பு செய்யும் போதெல்லாம் என் முகத்தில் கோடு விழும்.


அதனால்தான் இந்த கோடுகள். இனிமேல் நீ விஷம் விஷம் செய்யக் கூடாது. அப்படி செய்யாமல் இருந்தால் என் முகத்தில் உடலில் சுருக்கங்கள் விழாது என்று அன்போடு கூறினாள். உடனே அந்த சுட்டிப் பெண் பதிலளித்தாள். அம்மா அம்மா எனக்கு இப்பதான் புரிகிறது.


எனது தாத்தா பாட்டிகளுக்கு ஏன் முகத்தில் உடம்பெல்லாம் இத்தகைய  கோடுகள் என்று. அப்ப நீ சின்ன வயசுல ரொம்ப சேட்டை பண்ணுவியா அம்மா உங்க அப்பா அம்மாவிடம் என்று போட்டாலே ஒரு போடு.

தாய் அதிர்ந்து விட்டாள்.

 


Rate this content
Log in