தனிமை
தனிமை
1 min
245
இருள் நிறைந்த வானிலே தனிமையில் நானும் நிலாவாக உலா வந்தேன்...
சிறகொடிந்த பறவையாய்...
முற்களை இழந்த ரோஜாச் செடியாய்...
உன்னை இழந்து தவித்த வேளை...
என் இதயத்தை இரும்பாகவே வைத்திருந்தேன்...
அப்போது அறியவில்லை நீ மீண்டும் வந்து காந்தமாய் என்னை இழுப்பாயென...
இத்தனை நாட்கள் நான் என் மனதிற்குள் கட்டிய தடுப்பு வேலிகள் எல்லாம் உன்னை கண்ட அந்த நொடி மாயையாகிப் போனதே...
புன்னகை ஒன்றையே பரிசளிக்கும் உன் நினைவிற்கும்...
கண்ணீரை கடலாக்கி என்னை மூழ்கடிக்கும் நிஜத்திற்கும் இடையே உயிருள்ள நடை பிணமாய் நானும் என் தனிமையும் போதுமென வாழ்கிறேன் இன்று...
நீ பரிசளித்து சென்ற வலிகளின் விளைவினால்...
