பிரிவின் வலி
பிரிவின் வலி
உன் பிரிவிற்கு பிறகு, நீ எனக்களித்த ஒவ்வொரு பரிசும் எத்தனையோ இனிமையான நினைவுகளை என்னுள் நிரப்புகிறது, சுகமாய் ஒரு சுமையானது எனக்காக என் மகிழ்ச்சிக்காக இவ்வளவும் செய்தவனா இன்று என்னை இவ்வளவு காயப்படுத்தியது என்று ஒரு கணம் நினைக்கும் பொழுது மனம் கண்ணாடி துண்டுகளாய் நொருங்கிதான் போனது மன்னிப்பு தேடி என் முன்னே வரதே, அது இன்னும் என் வலிகளை அதிகரிக்கிறது, உன்னை பார்க்கவும் மனமில்லை உன்னுடன் சண்டை இடவும் மனமில்லை கல்லாய் போனது என் இதயம் நீ தந்த இந்த எதிர்பார்க்காத வலிகளால், உன்னை சந்திக்க நேர்ந்தாலும் யாரோ போலவே கடந்து செல்லவே விரும்புகிறது மனம், உன் மாற்றத்தால் என் மனம் மாறி போனது.,,,,,, சமாதானம் செய்வதாக கூறிக்கொண்டு என்னை தேடி வராதே, நீ தராத ஆறுதலை நீ இல்லாத இந்த தனிமை தந்து விட்டு போகட்டுமே.,,,,
