STORYMIRROR

SARVIN R

Others

4  

SARVIN R

Others

முகவரியற்ற கடிதம்

முகவரியற்ற கடிதம்

1 min
297


ஏன் எழுதுகிறேன்

என்கிற கேள்வியின்

நுனியில் அமர்ந்துக் கொண்டே

எழுதவேண்டி உள்ளது


பதில் கிடைக்காத

எத்தனையோ கேள்விகள்

இதனையும் இணைத்துவிட

தோன்றவில்லை

விட்டு விலகவும்

முடியவில்லை


உலகின் ஏதோ ஒரு

மூலையில்

அழுபவனுக்கு அருகில்

நானும்தான் அழுதேன்

என ஆறுதல் செல்வதற்கு


பெயர் தெரியாத

மனிதனொருவனின்

சொல்ல முடியாத துயரில்

பங்கு கொள்வதற்கு


அழுது அழுது

ஆவப்போவது ஒன்றுமில்லை

என்கிற அனுபவத்தைச்

சொல்லிச் செல்வதற்காவது

ஒருவன் எழுத வேண்டாமா

சொல்லுங்கள்



Rate this content
Log in