Radha Radha
Literary Captain
27
പോസ്റ്റ്സ്
1
ഫോളോവെർസ്
1
ഫോളോവിങ്

love is love

കൂട്ടുകാരുമായി പങ്കുവെക്കുക

நிகழ் காலத்தில் கடந்த கால நினைவுகளை வருங்காலத்திற்காக பதிவு செய்தல் அவசியம்

நான் உன்னோடு தானே எப்போதும் இருக்க போகிறேன் என்ற வார்த்தைக்கு பின்னால் அந்த வார்த்தை எவ்வளவு பெரிய சக்தியை நம் மனதிற்கு தருகிறது... அந்த வார்த்தை பொய்யென தெரிந்த அந்த நொடி சிதறிய கண்ணாடி துகளாய் மாறுகிறது நமது மனம்

சரியான துணை என்பது தவறு நமக்கான துணை என்பது தான் சரி

உணர்வுகள் மதிக்கப்படும் இடத்தில் உயிரோடும் மிதிக்கப்படும் இடத்தில் உயிரற்றும் உள்ளது

கவலைகள் மனதில் நிறைந்து கிடைக்கும் போதுதான் உன் மடிமீது உறங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றது... அந்த நாட்களில் உன்னை எந்த அளவுக்கு காதலித்தேன் என்று புரிகின்றது... வேண்டும் உன் மடிமீது உறங்கி அந்த நாட்கள் வேண்டும்....

சிங்கமாய் இருந்தாலும் காடானது தன் வீடாக இருந்தால் தான் மகிழ்ச்சி ...

இன்று வரை நீ சொல்லிவிட்டு போனதுபோல் சிரித்து மகிழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். சில நேரங்களில் மட்டும் ஏதும் செய்ய இயலா நிலையில் நிற்கிறேன்.. வானம் இருளால் சூந்தால் மனதிலும் இருள் சூழ்ந்து விடுகின்றது..

உன் இனிய நினைவால் நிறைந்து கிடந்த நம் வீடு இப்போது உன் கசப்பான வார்த்தைகளால் உதிர்ந்த விறகாய் போனது... பின்பு நீ கூறிய அனைத்து காரணங்களும்மே அவசியம் அற்று போனது...

நீ நீயாகவே இருப்பதால் தான் உன்னை எனக்கு பிடித்தது. நான் யோசித்தேன் உன்னால் எப்படி முடிகின்றது என்று!... நீ என்னை பிரிந்த பின்பும் நீ நீயாகவே இருக்கிறாய்.... அதை பற்றியும் யோசிக்கிறேன் எப்படி உன்னால் முடிகின்றது என்று!


ഫീഡ്

ലൈബ്രറി

എഴുതുക

അറിയിപ്പ്
പ്രൊഫൈൽ