கோடை காலம்
கோடை காலம்
கோடை விடுமுறையில், ஒரு நாள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். குளிர்ச்சியான மகிழுந்தில் சென்றதால் நன்றாக தூங்கிவிட்டேன்.
சுற்றுலாதலம் வந்ததும் இறக்கினோம். தங்க நிறத்தில் மின்னிய சூரியனின் கதிர்கள் சுட்டு எரித்தன. காலையில் கிளம்பிய வேகம் மகிழுந்தில் வந்த சந்தோசம் காணாமல் போனது.
வியர்வை வடிந்தது முகம் சுட்டெரித்து வீட்டிற்கு திரும்பலாம் என்றேன். இன்னும் போக வேண்டிய இடம் கொஞ்சம் தூரத்தில்தான் உள்ளது நடந்துதான் போக வேண்டும் என்றனர். நடந்தோம் நடக்க முடியவில்லை இளநீர் குடித்தோம். கொண்டுவந்த தண்ணீர்குவளை எல்லாம் காலியானது. இதற்குமேல் முடியாது என்றேன்.
இன்னும் கொஞ்சம் தூரத்திலம்தான் வா என்று அழைத்துச்சென்றனர். போகும் வழியில் ஒரு இனிமையான சத்தம், வெயிலில் ஒரு குளிர்காலம் போல் தோன்றியது. சிறு சிறு பாதைகளுக்கு இடையே வெள்ளி கம்பிகள் போன்று அழகாக காட்சிகள் என்ன இது எங்கே போகிறோம் என்ன பார்க்க போகிறேன் என்று விரைவாக நடந்தேன்.
இன்னும் சத்தம் அதிகமானது, மழை தூவுவது போல், யாரோ என்மேல் நீர் தெளிப்பது போல் தோன்றயது. வேகமாக நடந்தேன் இடத்தை அடைந்தொம். மலைக்கு நடுவே நீரை அள்ளி கொட்டுவது போல, மலைக்கு அந்தப்பக்கம் தொட்டியில் இருந்து நீர் நிறைந்து கொட்டுவது போல ஜில்லென்று அருவி கொட்டியது.
வெயிலில் களைப்பு தீர அதில் விளையாடி மகிழ்ந்தேன். அப்போது சூரியன் கண்முன்னே உள்ளது ஆனால் எனக்கு சூரியனின் வெப்பம் தெரியவில்லை. அருவியில் விளையாடிய போது வெயில் சுகமாகத்தான் இருந்தது.
நன்றாக விளையாடி மதிய உணவு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்து கிளம்பினோம். கிளம்பிய சிறிது நேரம், மனம் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அந்த குளிர்ச்சியான தருணம் தண்ணீரில் விளையாடியது, தலையில் ஏதோ தலை மேலே கல் விழுந்தது போல் மனதை விட்டு விலகவில்லை மிகவும் சந்தோசமாக இருந்தது. வரும் வழியில் சிறு சிறு நீர் ஓடை, அதில் அழகான குட்டி குட்டி கற்களை எடுத்து சேர்ந்துக்கொண்டே வந்தேன்.
காலையில் இதையெல்லாம் ரசிக்கவில்லையே.காலையில் வந்ததை விட மிகவும் வேகமாக நடந்தேன். மேலே வானத்தைப் பார்த்து வெயிலில் சுகத்தை அனுபவித்தேன்.
சிறிது நேரம் ஆக ஆக என் உடைகள் காய்ந்தது, கூந்தல் உலர்ந்தது, மகிழுந்து நிற்கும் இடம் வந்து சேர்ந்தோம், காலையில் வெயிலில் தாக்கம் கொடுமையாகவும், மாலையில் அதுவே மிகவும் சுகமாக மாறியுள்ளது. குளிர்சாதனத்தை அனைத்து விட்டு மகிழுந்தில் இயற்கையின் அழகை ரசித்தவாறு வீடு திரும்பினேன்.
சி. ஜினோதா.
