STORYMIRROR

Guna Ammu

Children Stories

4  

Guna Ammu

Children Stories

காகமும் குருவியும்

காகமும் குருவியும்

1 min
370

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. அது மரத்தில் கூடு கட்டி இருந்தது. அதே மரத்தில் குருவி ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது. காகம் சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி கூடு கட்டி இருந்தது. ஒரு காலத்தில் மிக பலமான காற்று வீசியது. அந்த காற்றில் காகத்தின் கூடு மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. அதனால் காகம் குருவியின் கூட்டில் கொஞ்சம் எனக்கு இடம் தருவாயா நான் கூடு கட்டி முடித்தவுடன் என் கூட்டிற்கு சென்று விடுகிறேன் என்று கூறியது. உடனே குருவி உனக்கு இடம் இல்லை என்று கூறியது. காகம் சோகத்துடன் சென்று ஒரு கூடு கட்டியது. மீண்டும் ஒரு நாள் அதைவிட பலத்தக் காற்று வீசியது. இந்த காற்றில் குருவியின் கூடானது கீழே விழுந்து விட்டது, ஆனால் காகத்தின் கூடு கீழே விழவில்லை. இப்போது குருவி காகத்திடம் சென்று என் கூடு அழிந்து விட்டது உன் கூட்டில் எனக்கு இடம் கொடு என்று கேட்டது. உடனே காகம் நீ தான் எனக்கு இடம் தரவில்லை நான் உனக்கு இடம் தருகிறேன் என் கூட்டிலே வாழ்ந்து கொள் என்று கூறியது. உடனே குருவி காகத்திடம் மன்னிப்பு கேட்டது.


Rate this content
Log in