மழையும் மனித நிலையும்
மழையும் மனித நிலையும்
1 min
0
தலைப்பு: மழையும் மனித நிலையும்
சில்லென்ற வானிலை
சில்லறையாய் வான்மழை
சிலிர்க்கிறது உடல்
சிலாகிக்கிறது மனம்
மணக்கிறது மண்வாசம்
மகிழ்கிறது என் சுவாசம்
ஆடியது மயில்
பாடியது குயில்
வந்தது மாலை
பெய்தது மழை
குளிர்ந்தது மண்
நிறைந்தது மனம்
மிதமாய் வீசியது
பால்கனி சாரல்நீர்!
இதமாய் இருந்தது
கோப்பை தேநீர்!
அமுதாய் சுவைத்தது
வெங்காய பக்கோடா!
இதுமாடி வீட்டு
சீமான்கள் ரசித்த
மழை.
அங்கே குடிசை வீட்டு
சாமானியன் மனமோ!
ஏன்தான் வந்ததோ
இந்த பாழாய்ப்போன
மழை...
ஆக!
மழை ஒன்றுதான்
மனிதனும் ஒன்றுதான் - அவன்
இருக்கும் நிலைதான்
தீர்மானிக்கிறது
ரசிப்பதையும்
வெறுப்பதையும்...
