கொரோனா,கடவுள்
இரண்டுமே ஒன்று.
கண்ணிற்கே தெரியாது. நோயினை நம்புபவர்கள் கடவுள் இருப்பதை ஏற்பதில்லை!
பொய் உலககாகிய இங்கு
உண்மையை பேசினால் வெகுளி!!
பொய் பேசுபவனே இங்கு புத்திசாலி.
கண் சிமிட்டும் விண்மீன்களும்,
குளிர்காற்றும்,
உற்சாகபானமாகிய தேநீருமே பயணங்களை இனிமையாக்குகின்றன.
காதல் எனும் தொடர்வண்டியில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனோ இரு மனங்களும் ஒரு சேர தாமதமாகியது
இரயில் தண்டவாளம் போல
ஆனால்,இரு மனம் ஒரு சேரும் தருணத்தில் தடம் மாறிவிட்டது
சந்திப்பு எனும் திருமணத்தில்