வணக்கம், நான் மணிமாறன் கதிரேசன். நான் பட்டயக்கணக்காளர் தொழிலை நடத்தி வருகிறேன். பொதுவாக எனக்குள் கவிதைகள் எழுவதுண்டு அதனை பல சந்தர்ப்பங்களில் எழுத மறந்த நிலையில் என்னையும் அக்கவிதை விட்டு விலகுவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட கைப்பேசியின் மூலம் இத்தளங்களை பயன்படுத்தி வரும்... Read more
Share with friendsபத்தாம் மாதத்தில் பிறந்தாலும் பண்ணிரண்டு கடந்தாலே வயதாகும் வயதுக்கே தாமதம் இருக்கும்போது வாழ்க்கை பலனுக்கும் பொதுவாகும் மணிமாறன் கதிரேசன்
நிரந்தரமற்ற வாழ்வில் நிலைப்பதும் துயரமோ நிலைகுலைந்து போவதில் நிம்மதியும் தொலையுமே வழங்கப்பட்டதோ உன்னிடம் வலிமையை மேம்படுத்தும் இழந்ததோ உனதில்லை இருப்பதைக் கொண்டாடுவோம். மணிமாறன் கதிரேசன்
மாணவ சமுதாயமே உன் கலவி எண்ணத்திற்கு முற்றுப்புள்ளியே உன் கல்வி என்னத்திற்கு தொடக்கப்புள்ளி கலவி....கல்வி மணிமாறன் கதிரேசன்
சிறப்படைவாய் எழுவதும் விழுவதும் இயற்கையில் நடப்பு! விழுந்ததும் எழுவதே உன்னிடம் சிறப்பு!! மணிமாறன் கதிரேசன்
உனக்கான ஒன்றை எழுதி வைத்தவன் இறைவன் எதிரில் வைத்தவன் ஆசான் எட்ட வைத்தவன் தந்தை எதிர் பார்த்தவள் தாய் எதிர் கொண்டவன் நீயானால் எதையும் கடக்கும் மனதாற்றலால் எளிதில் இடம்பெறுவாய் வரலாற்றில் மணிமாறன் கதிரேசன்
அருவருப்பான கூட்டுப் புழுக்களே! அழகான வண்ணத்துப் பூச்சிகளாம்!! அதற்கான காலம் வரும்போது!!! மணிமாறன் கதிரேசன்